நம்புங்கள்!
பதிவு எண் 45/2019
நம்மால் முடியும் !
மக்கள் சக்தி இயக்கம்
நிறுவனர் : டாக்டர். எம்.எஸ். உதயமூர்த்தி
மாநிலத்தலைவர் : மரு.த. இராசலிங்கம்
தலைமையகம் : 4/16 இராம் நகர், தூத்துக்குடி , 628002
இயக்கம் - ஒரு அறிமுகம்
இலட்சியங்கள்
கொள்கைகள்
நிறுவுநர் & தலைவர்கள்
செயல்திட்டங்கள்
மாநில பொறுப்பாளர்கள்
புத்தகங்கள்
தொடர்புக்கு
|
கொள்கைகள்:
இந்தியா ஒரு விவசாய நாடு, இதைக்கருத்தில் கொண்டு விவசாயிகளுடைய நலனுக்காகவும், விவசாய வளர்ச்சிக்காகவும் பாடுபடுதல்.
மக்களாட்சியில் குறைபாடுகள் கண்டறிந்து நேர்மையான முறையில், அகிம்சை வழியில், அவற்றை அகற்ற முயற்சி எடுப்பது.
அரசியல், சமூக, பொருளாதார விழிப்புணர்வை ஏற்படுத்துவது.
பொறுப்புள்ள குடிமக்களை உருவாக்க, ஆவன செய்வது.
மக்களாட்சியை வலுப்படுத்தி, வளர்வதற்கான முயற்சிகளில் ஈடுபடுதல்.
தொழில், உற்பத்தித் திறனை பெருக்க மக்கள் சக்தியை பயன்படுத்தல்.
தனிமனித வளர்ச்சிக்கும், நாட்டின் வளர்ச்சிக்கும் தேவையான, நாட்டுப்பற்று மற்றும் ஒழுக்க நெறியோடு கூடிய, கல்வித் திட்டத்தை உருவாக்குதல்.
மகளிர் கல்வி கற்று, வேலை வாய்ப்புகள் பெற்று ஆண்களுக்கு சமமாக உரிமையோடும், மரியாதையோடும் வாழ வழிவகை செய்வது.
சாதி, மத, இன, மொழி, கட்சி வேறுபாடின்றி மனிதனை மனிதனாக மதிக்கின்ற சமத்துவ சமுதாயத்தை உருவாக்க பாடுபடுதல்.
பொதுவாழ்வில் ஊழலை எல்லாவகையிலும் நீக்க முயற்சி எடுத்தல்.
சட்டம், ஒழுங்கு, நீதி இவை மேம்பட்ட நிலையில் சுதந்திரமாய் பொதுமக்களது நன்மைக்காக – செயல்பட வழிகாணுதல்.
நாமே எடுத்துக்காட்டாக நெறிகளுடன் வாழ்ந்து காட்டுதல்